இந்திய நிறுவனங்கள், தனி நபர்கள் மட்டுமே இறையாண்மை தங்கப் பத்திரங்களில் (SGB) முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் பயன்பாடுகளுக்கான இணைய வங்கி வசதி மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் ஒரு முதலீட்டாளரால் பத்திரங்கள் வாங்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பித்து, டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி விண்ணப்பத்திற்கு எதிராக பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரங்களின் வெளியீட்டு விலை பெயரளவு மதிப்பை விட கிராமுக்கு ரூ.50 குறைவாக இருக்கும். பத்திரங்கள் ஒரு கிராம் தங்கத்தின் அலகுகளாகவும் அதன் மடங்குகளாகவும் குறிப்பிடப்படும்.
இந்திய புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் அறிவித்தபடி முந்தைய மூன்று வணிக நாட்களில் 999 தூய்மையான தங்கத்தின் இறுதி விலையின் எளிய சராசரியின் அடிப்படையில் ரிடெம்ப்ஷன் விலை இந்திய ரூபாயில் நிர்ணயிக்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கியின் நெட் பேங்கிங் மூலம் எஸ்ஜிபியை ஆன்லைனில் வாங்குவது எப்படி?
Step 1: ஐசிஐசிஐ நெட் பேங்கிங்கில் உள்நுழையவும்.
Step 2: முதலீடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
Step 3: இறையாண்மை தங்கப் பத்திரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
SBI நெட் பேங்கிங் மூலம் SGB ஆன்லைனில் வாங்குவது எப்படி?
Step 1: SBI Net Bankig இல் உள்நுழையவும்
Step 2: இ-சேவையை கிளிக் செய்யவும்
Step 3: இறையாண்மை தங்க பத்திரம் திட்டத்தை கிளிக் செய்யவும்.
Step 4: நீங்கள் முதல் முறை முதலீட்டாளர் என்றால் பதிவு அவசியம்
Step 5: தானியக்கத்தில் தோன்றும் தகவல்களை கொடுக்கவும்.
Step 6: உங்கள் டிமேட் கணக்கு வைத்திருக்கும் NSDL அல்லது CDSL இலிருந்து டெபாசிட்டரி பங்கேற்பாளரை தேர்வு செய்யவும்.
Step 7: டிபி ஐடி, கிளையண்ட் ஐடியை உள்ளிட்டு 'சமர்ப்பி' தாவலைக் கிளிக் செய்யவும்
Step 8: விவரங்களை உறுதிசெய்து, 'சமர்ப்பி' தாவலைக் கிளிக் செய்யவும்
2023-24 ஆம் ஆண்டிற்கான இறையாண்மை தங்கப் பத்திரங்கள் முதல் தவணையாக ஜூன் 19-23 வரையிலும், இரண்டாவது தவணையாக செப்டம்பர் 11-15 வரையிலும் கிடைக்க உள்ளது.
அரசுப் பத்திரங்கள் சட்டம், 2006 (38 இன் 2006), மற்றும் அரசுப் பத்திரங்கள் ஒழுங்குமுறைகள், 2007 ஆகியவற்றின் விதிமுறைகளின்படி இறையாண்மை தங்கப் பத்திர சான்றிதழ்கள் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“