Advertisment

PM Kisan; பிஎம் கிசான் 10-வது தவணை வெளியீடு; உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா? தெரிந்து கொள்வது எப்படி?

பிரதமர் கிசான் திட்டத்தின் 10 ஆவது தவணைத் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். நிதியுதவி உங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்ள எளிய வழிமுறைகள் இங்கே.

author-image
WebDesk
New Update
PM Kisan; பிஎம் கிசான் 10-வது தவணை வெளியீடு; உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா? தெரிந்து கொள்வது எப்படி?

How to check PM Kisan 10th installment: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 10வது தவணை நிதிப் பலனை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 1) வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் தொகை மாற்றப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்குத் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.

Advertisment

நிகழ்ச்சிக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் குடும்பங்கள், குறிப்பாக சிறு விவசாயிகள், பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் 10வது தவணையைப் பெற்றுள்ளனர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.20,000 கோடி மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

பின்னர், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை பிரதமர் மோடி முன்னிலைப்படுத்தினார். “கொரோனா வைரஸ் அதன் சவால்களைக் கொண்டுள்ளது, ஆனால் அது இந்தியாவின் வேகத்தைத் தடுக்க முடியாது. 2022ல், நாம் நமது வேகத்தை மேலும் விரைவுபடுத்த வேண்டும். இந்தியா முழு எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் கொரோனாவை எதிர்த்து அதன் தேசிய நலன்களை நிறைவேற்றும், ”என்று பிரதமர் கூறினார்.

PM-KISAN திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ6,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது மூன்று சம தவணைகளில் ரூ2,000 ஆக வழங்கப்படுகிறது. மேலும், பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

காணொலி காட்சி நிகழ்வில், ​​சுமார் 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) ரூ.14 கோடிக்கும் அதிகமான ஈக்விட்டி மானியத்தையும் பிரதமர் வெளியிட்டார், இதன் மூலம் 1.24 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்.

இந்த நிகழ்வில் ஒன்பது முதல்வர்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல அமைச்சர்கள் மற்றும் விவசாய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், 2022 புத்தாண்டின் முதல் நாளில், சுமார் 10.09 கோடி விவசாயிகளுக்கு சுமார் 20,900 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக PM-KISAN திட்டம் தொடங்கப்பட்டது என்று கூறினார்.

PM-KISAN இன் 9வது தவணை ஆகஸ்ட் 2021 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சமீபத்திய தவணையுடன், திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தத் தொகை சுமார் ரூ.1.8 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. PM-KISAN திட்டம் பிப்ரவரி 2019 இல் அறிவிக்கப்பட்டது.

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் பணம் உங்கள் கணக்கில் வந்துள்ளா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், முதலில் உங்கள் பயனாளி நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம், பட்டியலில் உங்கள் பெயரை எளிதாகச் சரிபார்க்கலாம்.

1. PM Kisan Yojana இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in க்குச் செல்லவும்.

2. விவசாயிகள் கார்னர் (Farmer’s Corner section) என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.

3. விவசாயிகள் கார்னர் பிரிவில், பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

4. கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

5. 'Get Report' என்பதைக் கிளிக் செய்யவும்.

6. பயனாளிகளின் முழுமையான பட்டியல் தோன்றும், அதில் உங்கள் பெயரை நீங்கள் சரிபார்க்கலாம்.

உங்கள் தவணை நிலையைச் சரிபார்க்க

பிஎம் கிசான் திட்டத்தின் பத்தாவது தவணை தொகை உங்களுக்கு வந்துள்ள என்பதைத் தெரிந்துக் கொள்ள கீழ்கண்ட செயல்முறையை பின்பற்றவும்

1. உங்கள் தவணையின் நிலையைப் பார்க்க, PM Kisan இன் இணையதளத்தைப் பார்வையிடவும்.

2. வலதுபுறத்தில் விவசாயிகள் கார்னரைக் கிளிக் செய்யவும்.

3. பயனாளி நிலை (Beneficiary status) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

4. இப்போது உங்களுக்கு புதிய பக்கம் திறக்கும்.

5. உங்கள் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிடவும்.

6. இதற்குப் பிறகு உங்கள் நிலையைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுவீர்கள்.

மேலும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து, மொபைல் எண்ணை இணைத்து உள்ளவர்களுக்கு நேரடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Pm Kisan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment