ரேட்டிங் இல்லை; அதிகமான புகார்... பேக் லோன் ஆப்களை இப்படி கண்டுபிடிங்க!

ஒவ்வொரு உண்மையான நிதி நிறுவனத்திற்கும் ஒரு வாடிக்கையாளர் சேவை எண், மின்னஞ்சல் அல்லது குறை தீர்க்கும் அமைப்பு இருக்கும். ஆனால், இவை எதுவும் இல்லாதபட்சத்தில், அதனை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு உண்மையான நிதி நிறுவனத்திற்கும் ஒரு வாடிக்கையாளர் சேவை எண், மின்னஞ்சல் அல்லது குறை தீர்க்கும் அமைப்பு இருக்கும். ஆனால், இவை எதுவும் இல்லாதபட்சத்தில், அதனை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Loan App issue

இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் செயலிகள் மூலம் தனிநபர் கடன் பெறுவது மிகவும் சுலபமாகிவிட்டது. சில நொடிகளில் வங்கிகளுக்கு செல்லாமலேயே கடன் பெற முடியும். இது வசதியானது என்றாலும், சில ஆபத்துகளும் மறைந்துள்ளன. அங்கீகரிக்கப்படாத பல கடன் செயலிகள் சந்தையில் பெருகியுள்ளன. இவை மறைமுக கட்டணங்களை வசூலிப்பது, உங்கள் தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்துவது அல்லது கடன் திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் தொல்லை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

Advertisment

டிஜிட்டல் கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய ஐந்து அம்சங்களை இதில் காணலாம்:

1. செயலி சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா?

முதலில் நீங்கள் சரிபார்க்க வேண்டியது, அந்த செயலி சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனத்துடன் (NBFC) இணைக்கப்பட்டுள்ளதா என்பது தான். அனைத்து சட்டப்பூர்வ கடன் வழங்குநர்களும் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். பதிவு செய்யப்படாத செயலிகள் பெரும்பாலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றன. அவற்றை பயன்படுத்துவது உங்களுக்கு கடுமையான நிதி மற்றும் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே, ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்தை பார்வையிட்டு, கடன் வழங்கும் நிறுவனத்தின் பெயரை தேடி, அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும்.

Advertisment
Advertisements

2. கட்டணங்கள் தெளிவற்றதாகவோ அல்லது மறைக்கப்பட்டதாகவோ உள்ளதா?

ஒரு நம்பகமான கடன் வழங்கும் செயலி, வட்டி விகிதம், கடன் காலம், செயலாக்கக் கட்டணம், தாமதத்திற்கான அபராதங்கள் மற்றும் மொத்த திருப்பி செலுத்தும் தொகை போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக வழங்கும். இந்தத் தகவல்களில் ஏதேனும் கண்டறிவது கடினமாக இருந்தாலோ, தெளிவற்றதாக இருந்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ அது ஒரு பெரிய அபாய எச்சரிக்கை. மறைக்கப்பட்ட கட்டணங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலுத்த வழிவகுக்கும். அதனால், கடன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன், அதை முழுமையாக படித்து பார்க்க வேண்டும்.

3. செயலி அதிக அனுமதிகளை கேட்கிறதா?

சந்தேகத்திற்கிடமான கடன் செயலி உங்கள் தொடர்புகள், புகைப்படங்கள், இருப்பிடம் அல்லது கேமரா மற்றும் மைக்ரோஃபோன் ஆகியவற்றை அணுக அனுமதி கேட்கும். கடன் திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், கடன் வாங்கியவர்களை அச்சுறுத்த அல்லது தொல்லை கொடுக்க இவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் பான் அல்லது ஆதார் போன்ற அடிப்படை தகவல்களை மட்டுமே அணுகுவதற்கு செயலிகளுக்கு அனுமதி அளியுங்கள். தேவையற்ற தரவுகளை கேட்கும் செயலிகளை தவிர்க்கவும்.

4. மோசமான விமர்சனங்கள் அல்லது அதிக புகார்கள் உள்ளதா?

ஒரு செயலிக்கு மிகக் குறைவான விமர்சனங்கள், குறைந்த மதிப்பீடுகள் அல்லது தீர்க்கப்படாத பல புகார்கள் இருந்தால், அது பயனர்களுக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி. ஒரு நம்பகமான செயலிக்கு Google Play அல்லது App Store போன்ற தளங்களில் வலுவான இருப்பு இருக்கும். செயலியை பயன்படுத்தும் முன் விமர்சனங்களை கவனமாக படித்து, சமூக ஊடகங்களில் பயனர்களின் அனுபவங்களை சரிபார்க்கவும்.

5. தகவல் தொடர்பு சரியாக இல்லையா?

ஒவ்வொரு உண்மையான நிதி நிறுவனத்திற்கும் ஒரு வாடிக்கையாளர் சேவை எண், மின்னஞ்சல் அல்லது குறை தீர்க்கும் அமைப்பு இருக்கும். ஆனால், இவை எதுவும் இல்லாதபட்சத்தில், அதனை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

Online Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: