Advertisment

PF பணத்தை உடனே திரும்பப் பெற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வருங்கால வைப்பு நிதி: உங்கள் பிஎஃப் கணக்கில் தவறு இருக்கிறதா? அதை எவ்வாறு சரிசெய்வது?

How to withdraw you EPF Savings Money easily? : இந்தியாவில் மாதச் சம்பளம் பெறும் அனைவருக்கும் EPF கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் EPFபணத்தை இதுவரை போல் அல்லாமல் இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணத்தைப்பெறலாம்.

Advertisment

EPF பணத்தை நீங்கள் எடுக்க வேண்டுமெனில், நீங்கள் வேலைபார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியமாக இருந்தது. EPF பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்திசெய்து வேலைசெய்து அனுப்பி, அதற்கு நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகு, அந்தப் படிவம் EPF அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.

EPF பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதனுடன் வங்கிக்கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைக்க வேண்டும். எல்லா வேலைகளும் முடிந்து இறுதியாக EPF செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதுதான் இதுவரை EPF பணத்தை எடுக்கும் நடைமுறையாக இருந்தது.

மேலும் ஒருவர் பணிபுரிந்த நிறுவனத்தின் வேலையிலிருந்து விலகினால் EPFபணத்தைத் திரும்பப் பெறுவது என்பது பிரச்னையாகவும் சிக்கலாகவும் இருந்தது.

இப்போது இந்த அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வேலைபார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் EPF பணத்தை எளிதாக ஆன்லைனில் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

10 வருடத்துக்கு மேல் ஒருவர் EPFகணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தியிருந்தால் அவருக்கு EPF பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

இந்நிலையில், 1.9.2014-க்கு பின் வேலையில் மாதச் சம்பளம் 15 000 ரூபாய்க்கு மேல் பெறுபவர்களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை EPFஉறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

மேலும் EPF தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் EPFஉறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, EPFஉறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

அத்தோடு வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை//www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

EPFகணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது EPF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment