ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் கடன் வட்டி அதிகரிப்பு

ரெப்போ வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) உள்ளிட்ட வங்கிகளில் கடனுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) உள்ளிட்ட வங்கிகளில் கடனுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
interest rate

interest rate hike

ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) வங்கி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) ரெப்போ வட்டி விகித உயர்வுக்குப் பிறகு கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

Advertisment

பணவீக்கத்தை தடுக்கவும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையாமல் தடுக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை 0.50 அடிப்படை புள்ளியாக உயர்த்தியது.

இதனால் புதிய ரெப்போ விகிதம் 5.40% உள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையின் விளைவுகள் சாதாரண மக்கள் மீது பரவத் தொடங்கியுள்ளன. ஏனெனில் சில வங்கிகள் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.

இதைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் விரைவில் வட்டியை உயர்த்த உள்ளன.. ஐசிஐசிஐ வங்கி, உயரும் ரெப்போ விகிதத்துடன் ஒத்துப்போக அதன் வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் தரவரிசையை (I-ELBR) 9.10% ஆக உயர்த்தியுள்ளது. புதிய கடன் விகிதம் ஆகஸ்ட் 5 முதல் அமலுக்கு வந்தது.

Advertisment
Advertisements

இதேபோல், PNB அதன் ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (RLLR) 7.40 லிருந்து 7.90 ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய விகிதம் ஆகஸ்ட் 8 முதல் அமலுக்கு வரும். ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு கடனுக்கான விலையை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு சொந்தமான வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, இது மே மாதத்தில் இருந்து தொடர்ந்து மூன்றாவது அதிகரிப்பு ஆகும். பலவீனமான பொருளாதார நிலை, உயர் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னர் குறிப்பிட்டபடி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ரூபாயை நிலைப்படுத்தவும், கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க எடுக்கப்பட்ட இணக்கமான பணவியல் கொள்கை நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி கைவிட்டது.

ரிசர்வ் வங்கி கடன் வாங்குவதை கடினமாக்குவதற்கும் சந்தை மற்றும் நுகர்வோரிடமிருந்து பண விநியோகத்தை குறைப்பதற்கும் சுருக்கக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. ரிசர்வ் வங்கி எதிர்காலத்தில் ரெப்போ விகிதத்தை 6% வரை உயர்த்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது இறுதியில் கடனை அதிக வட்டி மற்றும் கடினமானதாக மாற்றும். இதற்கிடையில், பணவீக்கம் மேல் உச்சவரம்பு மட்டமான 6% ஐ விட அதிகமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rbi Pnb Icici Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: