பொதுவாக ஐசிஐசிஐ வங்கி ஏதோவொரு அறிவிப்பை ஒருமுறை வெளியிட்டால் அந்த அறிவிப்பு கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அல்லது மகிழ்ச்சியை தருவதாகவே இருக்கும்.
அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கியில் நிரந்தர வைப்புநிதிக்கான புதிய வட்டி விகிதம் இந்த மாதம் முதலே அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தது. இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD என்னும் நிரந்திர வைப்பு நிதித் திட்டங்களை ஐசிஐசிஐ வங்கி, செயல்பாட்டில் வைத்துள்ளது.
இந்த திட்டத்தில் ஏனைய வாடிக்கையாளர்களை விட மூத்த வாடிக்கையாளர்களுக்கு 50 பைசா வட்டி அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்புக்கு முன்னர் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய மாற்றத்தின் படி, 7 நாட்கள் முதல் 14 நாட்க வரையிலான குறைந்தகால வைப்புகளுக்கான நிரந்தர வைப்பு நிதியில், 4 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இதில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதே போல்15 முதல் 29 நாட்களுக்கு 4.25% வட்டி, 30 முதல் 45 நாட்களுக்கு 5% வட்டி வழங்கப்படுகிறது.
46 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் 5.50% வட்டி வழங்கப்படும் அதே வேளை, 185 முதல் 289 நாட்களுக்கு 6% வட்டி பெறப்படுகின்றது. மேலும் முதிர்காலம் உடனான வைப்பு நிதி என்றால் 185 முதல் 289 நாட்களுக்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அக்டோபர் 1 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்தது.
ஏனைய வங்கிகளில் வட்டி நிலவரங்கள்
எச்டிஎப்சி FD வட்டி வகிதம் 3.50%- 6.85%
எஸ்பிஐ வங்கி 4.5% – 6.4%