அவசரமாக கடன் வேண்டுமா? வங்கிக்கு செல்ல வேண்டாம். ஏடிஎம் சென்றாலே போதும். ஐசிஐசிஐ வங்கி, தனது தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மெஷின் மூலமாகவே கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிரச்சனையே இல்லை.
icici loan :
பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, வீட்டு சந்தில் மளிகை கடை வத்திருக்கும் அண்ணாச்சி ஆனாலும் சரி தொழில் தொடங்க, வீடுக்கட்ட, அவரச தேவைக்கு என பல தேவைக்காக கடன் வாங்குவது சர்வ சாதாரணம்.
அப்படி உடனடியாக கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கியிருக்கும் அருமையான வசதி தான் இந்த ஏடிஎம் கடனுதவி சேவை
ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களை கிரெடிட் அனாலிசிஸ் கம்பெனிகள் மூலமாகத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ஏடிஎம் மெஷின் மூலமாகவே ரூ.15 லட்சம் வரை ஐந்து வருடத்துக்கான தனிநபர் கடன்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அதே போல் ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
நெட் பேங்கில் IMPS வசதி மூலம் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? இதை படியுங்கள்!
அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
தற்போது முழு வீச்சில் அனைத்து வங்கிகளிலும் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட்போன் மூலம் பணம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றால் அது பாதுகாப்பானதாகவும் மிக்க பயனுள்ளதாக அமையும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
வங்கியில் தங்க கடன் பெறுவது எப்படி தெரியுமா?