ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: இந்தியாவில் ட்ரோன் நிறுவனங்களின் பங்குகள் 50% உயர்வு

'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்தியாவில் ட்ரோன் நிறுவனங்களின் பங்குகள் ஏறத்தாழ 50 சதவீதம் வரை உயர்வைக் கண்டுள்ளன. இதன் தாக்கம் குறித்து இக்குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்தியாவில் ட்ரோன் நிறுவனங்களின் பங்குகள் ஏறத்தாழ 50 சதவீதம் வரை உயர்வைக் கண்டுள்ளன. இதன் தாக்கம் குறித்து இக்குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Drone hike

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல், போரின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளது. மே 7 அன்று தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' இந்திய பாதுகாப்புத் துறையில் ட்ரோன்களின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த வெற்றியின் எதிரொலியாக, ஜென் டெக்னாலஜிஸ் (Zen Technologies), ஐடியாஃபோர்ஜ் (ideaForge) போன்ற முன்னணி ட்ரோன் நிறுவனங்களின் பங்குகள், இந்திய பங்குச்சந்தையில் பெரும் ஏற்றம் கண்டுள்ளன. சில நிறுவனங்களின் பங்குகள் இரண்டே வாரங்களில் 50% வரை உயர்ந்துள்ளன.

Advertisment

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில், இந்தியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் ட்ரோன் அமைப்புகள் முக்கிய பங்காற்றின. எதிரி விமான தளங்கள் அழிக்கப்பட்டதோடு, பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை, நவீன போரில் ட்ரோன்களின் அசைக்க முடியாத சக்தியையும், இந்தியாவின் தற்காப்பு திறனையும் உலகிற்கு உணர்த்தியது.

நவீன போர்க் காலங்களில், எல்லை கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களை சேகரிப்பதில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2019 புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்த பாலகோட் வான்வழித் தாக்குதல் போன்ற சம்பவங்கள், கண்காணிப்பு மற்றும் துல்லியமான நடவடிக்கைகளில் ட்ரோன்களின் வளர்ந்து வரும் பங்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

தற்போதைய இந்தியா - பாகிஸ்தான் பதற்றங்கள் ட்ரோன் மற்றும் எதிர் - ட்ரோன் தொழில்நுட்பங்களின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவின் எல்லைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், வருங்காலத்தில் ட்ரோன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Advertisment
Advertisements

ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs), தானியங்கி நில வாகனங்கள், மற்றும் ஆளில்லா நீருக்கு அடியில் உள்ள வாகனங்கள் (UUVs) ஆகியவற்றின் தேவை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இவற்றின் குறைந்த செலவு மற்றும் மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கும் திறன் ஆகியவை இந்த தேவை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகும்.

இந்திய அரசு உள்நாட்டு உற்பத்தியின் மூலம் தனது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தி வருகிறது. இது உள்நாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் முன்பு எப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவை பாதுகாப்பு உற்பத்தித் துறையில் ஒரு வளர்ந்து வரும் மையமாக நிலைநிறுத்துகிறது.

தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய அரசு தனது பாதுகாப்பு செலவினங்களை - குறிப்பாக ட்ரோன் தொழில்நுட்பங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை ட்ரோன் பங்குகளின் மீது வேகமாக முதலீடு செய்ய தூண்டியுள்ளது. இதன் விளைவாக, இரண்டே வாரங்களில் ட்ரோன் தொடர்பான பங்குகளில் 50 சதவீதம் வரை லாபம் கிடைத்துள்ளது.

மே 7 முதல் ட்ரோன் பங்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி அதன் பங்கு விலையில் 50 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை ரூ. 362 இல் இருந்து ரூ. 546 ஆக அதிகரித்துள்ளது.

ட்ரோன் ஆச்சார்யா ஏரியல் இன்னோவேஷன்ஸ் (DroneAcharya Aerial Innovations), ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களாக சரிவில் இருந்த போதிலும், மே 7 முதல் 41% உயர்ந்து ஒரு பெரிய எழுச்சியை சந்தித்துள்ளது. ஜென் டெக்னாலஜிஸ் (Zen Technologies) நிறுவனமும் ரூ. 1,361 இல் இருந்து ரூ. 1,865 ஆக 37 சதவீதம் உயர்ந்து, ஈர்க்கக்கூடிய வருவாயை அளித்துள்ளது.

இதனிடையே, பாராஸ் டிஃபென்ஸ் (Paras Defence) பங்குகள் இதே காலகட்டத்தில் 16 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளன. சோலார் இண்டஸ்ட்ரீஸ் (Solar Industries) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (Hindustan Aeronautics) போன்ற பிற பங்குகளும் மே 7 முதல் 10 சதவீதம் வரை லாபம் ஈட்டியுள்ளன.

drone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: