/tamil-ie/media/media_files/uploads/2018/02/rotomac-kZpB-621x414@LiveMint.jpg)
ஆர்.சந்திரன்
ரோட்டோமேக் குழுமம், 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையிலேயே வரி பாக்கி கட்டாமல் தொடர்வதால், உடனடியாக 106 கோடி ரூபாயை வரி பாக்கியாகச் செலுத்தும்படி, வருமான வரித்துறையால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
25 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு குறைவான தொகையை, திட்டமிட்டு வரி மோசடி செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் 3 மாதம் முதல் 2 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கலாம் எனவும், 25 லட்ச ரூபாய்க்கு கூடுதலாக மோசடி செய்பவர்கள் அபராதத்துடன், 6 மாதம் முதல், 7 ஆண்டுகள் வரை சிறை செல்ல வாய்ப்பு எனவும் உள்ள நிலையில் ரோட்டோமேக் அதிபரும், குழுமமும் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர தற்போது பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று 3,695 கோடி ரூபாய் பாக்கியை செலுத்தாமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கடந்த திங்களன்று கான்பூர் நகரில் 3 இடங்களிலும், அஹமதாபாத்தில் ஒரு இடத்திலும் ரோட்டோமேக் குழுமத்தின் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையில் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Key words :
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us