ஒ இதுதான் கதையா? வெறிச்சோடிய உக்கடம் மார்க்கெட்!

காய்கறிகள் விலை உயர்வால் கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

காய்கறிகள் விலை உயர்வால் கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Increase in vegetable prices in Koyambedu Ukkadam market

கோயம்புத்தூர் உக்கடம் சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகளின் வரத்து குறைவானதால் பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

Advertisment

குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இஞ்சி, பீன்ஸ் ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்து உள்ளது.
இதனால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரத்தின் படி, தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு கிலோ 180 ரூபாய், இஞ்சி கிலோ 260 ரூபாய், கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 40, கத்தரிக்காய் கிலோ 50, உருளைக்கிழங்கு கிலோ 30, முருங்கைக்காய் கிலோ 50, பெரிய வெங்காயம் கிலோ 25 என விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

அன்றாட சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.
எனவே பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. தக்காளியின் விலை முந்தைய நாள்களை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: