/tamil-ie/media/media_files/uploads/2020/10/investment-759.jpg)
இந்த முதலீடுகள் கூட்டு வருவாயை வழங்குகின்றன என்றாலும், அபாயங்களைக் குறைப்பதற்கும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கும் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம்.
Mutual Fund | இந்தியாவில் மக்களிடையே தற்போது முதலீட்டு பழக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. தனிநபர்கள் நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்), பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
இந்த முதலீடுகள் கூட்டு வருவாயை வழங்குகின்றன என்றாலும், அபாயங்களைக் குறைப்பதற்கும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கும் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம்.
இதற்கிடையில், பரஸ்பர நிதிகள் ஒரு பிரபலமான தேர்வாக உருவெடுத்துள்ளன. இது முதலீட்டாளர்களை குறிப்பாக பெண்களை ஈர்க்கிறது.
இந்த நிலையில், இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கத்தின் (AMFI) தரவுகளின்படி, மியூச்சுவல் ஃபண்டுகளில் பெண் முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, மார்ச் 2017 இல் 15 சதவீதத்திலிருந்து 2023 டிசம்பரில் சுமார் 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரியில், பரஸ்பர நிதிகளில் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் (AUM) ரூ. 50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளன.
இது பரந்த அளவிலான முதலீட்டாளர்களிடையே பரஸ்பர நிதி முதலீடுகளுக்கான அதிகரித்து வரும் விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
மேலும், கிராமப்புறங்களில் பரஸ்பர நிதி முதலீடுகளின் வளர்ச்சி விகிதம் குறிப்பிட்ட காலப்பகுதியில் நகர்ப்புற மையங்களை விட அதிகமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் தனிநபர்களிடையே பரஸ்பர நிதி முதலீட்டு வாய்ப்புகளை நோக்கிய ஆர்வத்தை குறிக்கிறது.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் கிட்டத்தட்ட 50 சதவீத பெண் முதலீட்டாளர்கள் 25-44 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.
புவியியல் ரீதியாக, மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெண்களின் அதிகபட்ச பங்களிப்பில் 40 சதவீதத்துடன் கோவா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து 30 சதவீதத்துடன் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. கூடுதலாக, சண்டிகர், மகாராஷ்டிரா மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் வருகின்றன.
இந்த மாநிலங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் பங்கை வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் வழக்கமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய முனைகிறார்கள்.
இதற்கிடையில், பெண் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை 2023 டிசம்பரில் 42,000ஐ எட்டியது, நிர்வாகத்தின் கீழ் சொத்துக்கள் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.