Advertisment

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய சேவை!

மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian overseas bank new announcement

Indian overseas bank new announcement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,பொதுத்துறை வங்கியில் சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அது வழங்கும் லோன் திட்டங்களை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Advertisment

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியாவில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்குகின்றது.பொதுவாக வெளிநாட்டில் படிப்பதென்றால் இதன் வரம்பு ரூ. 20 லட்சம் ஆகும். ரூ. 4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 12.25 விழுக்காடு வட்டியும், ரூ. 4 லட்சம் அதற்கு மேற்பட்ட தொகைக்கு 13.50 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது. சில சமயங்களில் இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாம்.

இதில் இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு கடன் தொகை ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்டதாக இருக்குமானால், 5 விழுக்காடும் வழங்கப்படும்.

அதுவே வெளிநாட்டில் படிப்பதென்றால் 15 விழுக்காடும் முன்தொகையாகச் செலுத்த வேண்டும். மேலும் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை.

எப்போது திருப்பி செலுத்தலாம்?

இந்த கல்விக் கடன் தொகையை படிப்பு முடிந்த 6 முதல் 12 மாதங்களுக்கு பின் திருப்பிச் செலுத்தலாம். கடன் பெற்ற மாணவர்கள், சம அளவிலான மாதத் தவணைகளில் 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் கடனை செலுத்த வேண்டும்.

டெபிட் கார்டுக்கு பணம் செலுத்துங்கள்! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தந்த எஸ்பிஐ

எம்.எஸ்.வேர்ட் (M.S.Word) ஆவண வடிவிலான கடன் விண்ணப்பத்தை நீங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாரை அணுகலாம். அல்லது அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெறலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment