/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-4-2.jpg)
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி திட்டத்தில் தற்போது 6.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
நாட்டில் உள்ள தொழிலாளர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் தபால் அலுவலகத் திட்டம் மிகவும் விரும்பதக்கதாக கருதப்படுகிறது.
இது உத்தரவாதமான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்குகிறது. இதில், பல்வேறு திட்டங்கள் இருப்பதால், மாதந்தோறும் சிறிய தொகையை முதலீடு செய்வது பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வருமானத்திற்கு வழிவகுக்கும்.
வட்டி விகிதம்
அத்தகைய திட்டங்களில் ஒன்று தொடர் வைப்புத்தொகை ஆகும். இதில் நீங்கள் வெறும் ரூ. 100 முதலீட்டில் தொடங்கலாம். இதற்கு அரசு 6.5 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதற்கு முன்னர் 6.2 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.
3 லட்சம் ரிட்டன்
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.2 ஆயிரம் விகிதம் 5 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். அதாவது நாளொன்றுக்கு ரூ.66 முதலீடு ஆகும்.
இதன்மூலம் 5 ஆண்டுகால முதிர்ச்சியின்போது ரூ.1,41,983 ரிட்டன் பெறலாம். அதேவேளையில முதலீட்டு தொகை இரட்டிப்பு ஆகும்பட்சத்தில் ரூ.2,83,968 ரிட்டன் கிடைக்கும்.
அதாவது நாளொன்றுக்கு நீங்கள் ரூ.133 முதலீடு செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.