/tamil-ie/media/media_files/uploads/2020/10/Post-Office-Saving-Scheme-Post-Office-Selva-Magal-Thittam.jpg)
இதில் குறைந்த நேரத்தில் அதிக வருமானம் பெறலாம்.
Post Office Savings Scheme | வங்கிகளை விட தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. அதேநேரத்தில், வங்கிகளை விட தபால் நிலைய திட்டங்களில் அதிக மக்கள் முதலீடு செய்கின்றனர். மேலும், இதில் குறைந்த நேரத்தில் அதிக வருமானம் பெறலாம்.
இந்த நிலையில், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.
தற்போது நாம் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்ட வட்டியில்.. முதலீட்டாளர்களுக்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். முதலீட்டாளர்கள் வெவ்வேறு கால அவகாசத்துடன் இதில் முதலீடு செய்யலாம்.
முதலீட்டாளர்களுக்கு 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என முதலீடு செய்யலாம். அதாவது, போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் (நேர வைப்புத் திட்டம் தகுதியானது) 1 வருடத்திற்கு முதலீடு செய்தால், உங்களுக்கு 6.9 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
இருப்பினும், 2 அல்லது 3 வருட கால முதலீட்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தின் பலன் கிடைக்கும். 5 வருட காலத்திற்கான முதலீடு 7.5 சதவீத வட்டி விகித பலன் கிடைக்கும்.
உதாரணமாக.. நீங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.
இதை கணக்கிட்டால் ரூ. 5 லட்சம் மீது ரூ. 2,24,974 வட்டி கிடைக்கும். முதிர்ச்சியின் போது நீங்கள் ரூ.7,24,974 பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.