iob atm card : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா முழுவதும் டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. துவக்கத்தில் ஏடிஎம்களில் பணம் எடுக்க வசூலிக்கப்பட்ட கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்த வங்கிகள், மீண்டும் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
தற்போது பல வங்கிகள், சில மாற்றங்களை ஏற்படுத்தி, மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச அளவு பரிவர்த்தனைகளை மட்டுமே இலவசமாக வழங்குகின்றன. நாட்டில் அதிக அளவு ஏடிஎம்-களை கொண்டுள்ள பிரபல வங்கிகள் விதிக்கும் கட்டணங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
இந்த கட்டணத்தை தேசிய பண பரிவர்த்தனை கழகம் நிர்ணயிக்கிறது.ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் தடுமாறி வரும் வங்கிகள் இந்த கட்டணத்தை உயர்த்துவதை விரும்பவில்லை.
இது புறம் இருக்கட்டும், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஐஓபி ஏடிஎம்- கார்டை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த தகவல். மற்ற எந்த வங்கியிலும் இல்லாத ஒரு சிறப்பான சலுகை இந்த வங்கியில் உள்ளது. என்ன தெரியுமா?
நீங்கள் எந்த வங்கியாக இருந்தாலும் சரி.. உங்கள் மொபைல் தேடி பேலன்ஸ் விவரம் வரும் எப்படி தெரியுமா?
ஆம், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் கார்டை நீங்கள் எத்தனை முறை தொலைத்தாலும் சரி உங்களிடம் கட்டணம் மட்டும் வசூலிக்க படாது. வருடாந்திர கட்டணமாக ரூ. 150 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு இந்தியன் ஒவர்சிஸ் வங்கியில் ரூ. 50000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
அதே வங்கியின் ஏடிஎம்-ல் எத்தனை முறை வேண்டுமானலும் பணம் எடுக்கலாம். மற்ற வங்கியின் ஏடிஎம்-ல் 5 முறைக்கு மேல் சென்றால் கட்டணம் கட்டாயம்.