/tamil-ie/media/media_files/uploads/2021/10/ircyc.jpg)
ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் பயணிகளுக்கு ரயில் டிக்கெட், விமான டிக்கெட், சுற்றுலா பேக்கேஜ் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பேருந்து டிக்கெட்டையும் முன்பதிவு செய்யும் வகையில் புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது
பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி 22 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் தொகையைத் தவிர பயணிகளிடம், எவ்வித கூடுதல் கட்டணமும் ஐஆர்சிடிசி வசூலிப்பது கிடையாது.
இந்த பேருந்து முன்பதிவு நீண்ட நாள்களாக சோதனை முயற்சியிலிருந்து. தற்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஐஆர்சிடிசி அறிக்கையின்படி, பயனர்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் டிக்டெக் முன்பதிவு செய்யலாம்.இதன் சோதனை முயற்சி, பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஐஆர்சிடிசி ரெயில் கணக்ட் செயலி மூலம் தினந்தோறும் 2 ஆயிரம் பயணிகள் டிக்கெட்களை முன்பதிவு செய்து வந்தனர். அதே போல, பயணிகள் www.bus.irctc.co.in என்ற இணையதளத்திற்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரம் பேருந்து ஆபரேட்டர்களுடன் ஐஆர்சிடிசி இணைந்து பணியாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.