/tamil-ie/media/media_files/uploads/2022/09/Markets-Reuters.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022
Stock Market Today : வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (நவ.14) வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் இழப்பில் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 170.89 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 20.55 புள்ளிகளும் இழப்பை பதிவு செய்தன.
தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஆக்ஸிஸ் வங்கி, பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
எனினும் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 0.28 சதவீதமும், நிஃப்டி 0.11 சதவீதமும் சரிந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.