ITR Filing: 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய சம்பளம் வாங்கும் நபர்கள் மற்றும் தணிக்கை அல்லாத வழக்குகளுக்கு இன்று (திங்கட்கிழமை, ஜூலை 31) கடைசி தேதி ஆகும்.
வருமான வரித் துறையின் கூற்றுப்படி, 2022-23 நிதியாண்டில் ஜூலை 30 ஆம் தேதி மதியம் 1 மணி வரை 5.83 கோடிக்கும் அதிகமான ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையை தாண்டியுள்ளது. கடைசி நிமிட அவசரம் மற்றும் தாமதத்திற்கான அபராதங்களைத் தவிர்க்க வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை விரைவாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ.2.50 லட்சம் ஆண்டு வருமானம்: Nil ITR தாக்கல் செய்து விட்டீர்களா?
ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும்?
ஒருவர் தங்கள் ITR தாக்கல் செய்வதை தவறவிடுவது நல்லதல்ல என்றாலும், காலக்கெடுவிற்கு முன் யாராவது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால், அவர்கள் 50-200 சதவிகித வரி நிலுவைத் தொகையுடன் தாமதமாகத் தாக்கல் செய்யலாம், ஆனால் இழப்புகளை திரும்பப் பெறவோ அல்லது வழக்குத் தொடரும் நோட்டீஸ்களைத் தவிர்க்கவோ முடியாது.
வரி செலுத்துவோர் தங்கள் ITR ஐ தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
வரி செலுத்துவோர் தங்கள் ITR ஐ தாக்கல் செய்யவில்லை என்றால், தற்போதைய ஆண்டில் ஏற்படும் இழப்பை திரும்ப பெற முடியாது.
மேலும், வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், குறைவான வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வரியின் 200 சதவீதத்திற்கு சமமான அபராதம் பிரிவு 270A இன் படி விதிக்கப்படும்.
மேலும், வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் பெற்ற பிறகும் அவர்கள் வேண்டுமென்றே ரிட்டன் தாக்கல் செய்யத் தவறினால், அவர்கள் வழக்கையும் சந்திக்கலாம்.
குளறுபடிகளைத் தவிர்க்கவும் மற்றும் அனைத்து வரி விவரங்களும் காலக்கெடுவுக்குள் துல்லியமாக அறிவிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும் முறைகளை முடிக்குமாறு வரி செலுத்துவோரை வருமான வரித்துறை வலியுறுத்தி வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil