/indian-express-tamil/media/media_files/2025/03/18/RJmbGV4CzwvMl6uMm5Eo.jpg)
கிரிக்கெட் ரசிகர்களுக்கு முகேஷ் அம்பானி ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளார். ஜியோ தனது தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு கிரிக்கெட் சலுகையை ஏப்ரல் 15, 2025 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக இந்த சலுகை மார்ச் 22-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
இந்த சலுகையின் கீழ், ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் புதிய ஜியோ சிம் இணைப்பைப் பெற்றால் அல்லது குறைந்தபட்சம் ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால், ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
ஏற்கனவே ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.100-க்கு ஆட்-ஆன் பேக் எடுத்தும் இந்த சலுகையைப் பெறலாம். இதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் சீசனில் கிரிக்கெட்டை முழுமையாக அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வரம்பற்ற கிரிக்கெட் சலுகையில், வாடிக்கையாளர்களுக்கு டிவி/மொபைலில் 90 நாட்களுக்கு இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. அதுவும் 4K தரத்தில்.
இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஐபிஎல் கிரிக்கெட் சீசனை இலவசமாக அனுபவிக்க முடிகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் பேக் மார்ச் 22, 2025 முதல் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதனுடன், ஜியோ வீடுகளுக்கு ஜியோ ஃபைபர் அல்லது ஜியோ ஏர் ஃபைபரின் இலவச சோதனை இணைப்பையும் வழங்குகிறது. அல்ட்ரா-ஃபாஸ்ட் இணையத்தின் இலவச சோதனை இணைப்பு 50 நாட்கள் வரை இலவசமாக இருக்கும்.
வாடிக்கையாளர்கள் 4K-வில் கிரிக்கெட் பார்க்கும் சிறந்த அனுபவத்துடன் சிறந்த ஹோம் என்டர்டெயின்மென்ட்டையும் அனுபவிக்க முடியும். ஜியோ ஃபைபர் அல்லது ஜியோ ஏர் ஃபைபரின் இலவச சோதனை இணைப்புடன் 800+ டிவி சேனல்கள், 11+ ஓடிடி அப்ளிகேஷன்கள், வரம்பற்ற வைஃபை ஆகியவையும் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.