ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகாம் மார்கெட்டில் முன்னணி நிறுவனங்களாக திகழும், ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றங்களை அறிவித்து வருகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் கேஸ்பேக் ஆஃபர், ரீசார்ஜ் கூப்பன்கள், ஷாப்பிங் வவுச்சர்கள் ஆகியவையும் வழங்குப்படுகின்றன. சமீபத்தில் ஜியோ நிறுவனம், இருமடங்கு, மும்மடங்கு வரை கேஸ்பேக் சலுகைகளை அறிவித்தது. இதனுடன் போட்டி போடும் விதமாக ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை குறைத்தது.
அதன் பின்பு, ஜியோ நிறுவனம் அதிரடி சலுகையாக நாள் ஒன்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டேட்டாவின் அளவை அதிகரித்தது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி வழங்கப்பட்ட திட்டங்கள் 1.5 ஜிபி டேட்டாவாகவும், 1.5 ஜிபி டேட்டா வழங்கிய திட்டங்களை 2 ஜிபி டேட்டாவாகவும் மாற்றி அறிவித்தது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனையடுத்து, ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில், நாள் ஒன்றுக்கும் வழங்கப்படும் டேட்டாவின் அளவை அதிகரித்து. இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு இனி 3 ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வேகத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா, மொத்தம் 84ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் கால்ஸ், ரோமிங் கால்ஸ், தினமும் 100 இலவச குறுங்செய்திகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பால் டெலிகாம் சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.