/tamil-ie/media/media_files/uploads/2022/11/kerala-lottery.jpg)
கேரள லாட்டரி வின்வின் குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
கேரள லாட்டரி திங்கள்கிழமை வின்வின் குலுக்கலை நடத்திவருகிறது. இந்த குலுக்கலில் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு வெளியாகும். இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in பார்க்கலாம்.
கேரளத்தில் லாட்டரிகள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது. இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நிறுவனத்திற்குத் திருப்பித் தர 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளன. அதற்குள் டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும்.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் வழங்கப்படும். தொடர்ந்து, இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் ஆகும். கேரள லாட்டரி முடிவுகளுக்கு இணைப்பில் இணைந்திருங்கள்.
(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.