பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு ஏழை-எளிய மக்களுக்கு காப்பீடு கி்டைக்கும் வகையில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தை கொண்டுவந்தார்.
இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி அஞ்சல் அலுவலகங்களிலும் தொடங்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும். அந்த வகையில் வருகிற 31ஆம் தேதிக்குள் இந்தப் பணம் உங்களது கணக்கில் இருந்து பிடிக்கப்படும்.
இதற்கிடையில், ஏப்ரலில் வங்கிகள் ஆட்டோமெடிக் டெபிட் வசதிக்காக சில குறிப்பிட்ட பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணமாக பெறுகின்றன.
மினிமம் பேலன்ஸ் மற்றும் ஏடிஎம் கட்டணமாக ஒவ்வொரு வங்கிகளும் விதவிதமான கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“