Advertisment

இப்படி முதலீடு பண்ணுங்க.. ஓய்வு காலத்தில் ரூ.5 கோடி கன்ஃபார்ம்!

இந்தத் திட்டத்தில் சரியாக திட்டமிட்டால் நீங்கள் ஓய்வூதியத்தின்போது ரூ.5 கோடி வரை திரட்டலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Know to get 5 crores return in NPS

தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசாங்க ஓய்வூதிய முதலீட்டுத் திட்டமாகும்.

உங்கள் ஓய்வூதியத்தைப் பற்றிய கவலையை விடுங்க. ஓய்வுக்குப் பிறகு நீங்கள் எப்படி நிதி ரீதியாக வலுவாக இருக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

பலரும் இதனை தாங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். எனினும், எந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Advertisment

அதற்கான பார்முலா ஒன்றை தற்போது பார்க்கலாம். இந்தப் ஃபார்முலா தற்போது பணியை தொடங்குபவர்களுக்கு சிறந்தது என்பதை நிரூபிக்கும்.

நீங்கள் 25 வயதில் இருந்து முதலீட்டைத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது, உங்கள் சம்பளத்தில் இருந்து தினமும் ரூ.442 சேமித்து, புதிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்யுங்கள்.

அதாவது, ஒரு மாதத்தில் நீங்கள் ரூ.13,260 முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.13,260 முதலீடு செய்ய வேண்டும்.

60 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்தால், ஓய்வு பெறும் போது வட்டியுடன் சேர்த்து சுமார் ஐந்து கோடி ரூபாய் ரிட்டன் பெறலாம்.

இந்தத் திட்டத்தில், உங்கள் முதலீட்டில் 10 சதவீத வட்டியைப் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பிறகு கூட்டு வட்டியின் கீழ், உங்கள் பணமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment