lic policy online : எல் ஐ சி.. நீங்கள் சேமிக்கும் பணம் உங்கள் வாழ்நாளுக்கு எவ்வளவு உபயோகரமானதாக இருக்கும் என்பதை எல்.ஐ.சி பாலி வாடிக்கையாளர்களிடம் சென்று கேளுங்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை சேமிக்கும் பழக்கம் என்பது கட்டாயம் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமில்லை எல்.ஐசி போன்ற நிறுவனங்கள் உங்களுக்காக்வே பல்வேறு ஆயுள் காப்பீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் எல் ஐ சி- நிறுவனத்தில் இருக்கும் மிகச் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஜீவன் உமங் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்த்ன் கீழ் 99 வரை பாலிசிதாரரால் பிரீமியம் செலுத்த முடியும், மேலும் ஒரு பெறும் தொகையினை முதிர்வு காலத்தில் பெற முடியும். ஜீவன் உமங் திட்டம் வயது வரை காப்பீடு அளிப்பதினால் வாழ்-நாள் திட்ட பிராடக்ட் என்று அழைக்கப்படுகின்றது.
எல்ஐசி திட்டங்கள் பொதுவாக பாலிசி துவங்கியதில் இருந்து 40 ஆண்டுகளில் அதன் நன்மையினை அளிக்கும். காப்பீடு 80 வயதிற்குள் வழங்கப்படும்.பிற நிறுவனங்கள் எல்லாம் 80 வயது வரை காப்பீடு அளிக்கும் நிலையில் ஜீவன் உமங் திட்டம் வயதில் தான் முதிர்வு தொகையினை அளிக்கும். 55 ஆண்டுகள் வரை ஜூவன் உமங் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் எல்.ஐ.சி 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. இந்தக் விதிமுறையின் கீழ், வைத்திருப்பவர் வாழ்நாள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார். நீங்கள் ஏதேனும் காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுத்தால், பாலிசிதாரருக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 8% ஆயுள் காப்பீடு கிடைக்கும்.
ரூ .62.95 லட்சம் பெறுவது எப்படி ?
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ .1,302 டெபாசிட் செய்தால், உங்கள் ஆண்டு பிரீமியம் ரூ .15,298 ஆக இருக்கும். அதன்படி, உங்கள் மொத்த முதலீடு 30 வருட காலத்திற்கு ரூ .4,58,940 ஆக இருக்கும். 31 ஆம் ஆண்டிலிருந்து, பாலிசிதாரருக்கு ஆண்டுக்கு ரூ .40,000 வருமானம் கிடைக்கும். இதன்படி, நீங்கள் உங்கள் 100 ஆண்டுகளைக் கணக்கிட்டால், நீங்கள் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, அது 40,00000 ஆக இருக்கும், இது 28 லட்சம் ரூபாயாக மாறும்.
ஆக்சிஸ் வங்கியின் திடீர் அறிவிப்பு.. வாடிக்கையாளர்களின் கனவு நிஜமாகிறது
காப்பீடு செய்யப்பட்ட நபர் 101 வயதாகிவிட்டால் அவருக்கு தனித்தனியாக ரூ .62.95 லட்சம் கிடைக்கும்.