/tamil-ie/media/media_files/uploads/2021/05/LIC-1.jpg)
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) மக்களுக்கு 'ஜீவன் அக்ஷய்' பாலிசியை வழங்கி வருகிறது. இந்தக் பாலிசியின் மூலம் முதலீட்டாளர்களுக்கு வழக்கமான மாத ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. இந்த பாலிசியில் மக்கள் தங்களுக்காக அல்லது தங்கள் அன்புக்குரியவர்களுக்காக முதலீடு செய்யலாம்.
பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை அனுபவிக்க முடியும்.
அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் தனது பாலிசிதாரர்களுக்கு பல்வேறு விருப்பங்களை வழங்கி வருகிறது. அவர்கள் ஒரு ஆண்டு, அரை ஆண்டு, காலாண்டு மற்றும் மாத அடிப்படையில் ஓய்வூதியத்தை தேர்வு செய்யலாம்.
இந்த கொள்கை 30 முதல் 85 வயது வரையிலான அனைத்து இந்தியர்களுக்கும் உள்ளதாகும். மேலும், குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் கூட்டு முதலீட்டாளர்களாகவும் மாறலாம். இருப்பினும், ஜீவன் அக்ஷய் திட்டத்தின் கீழ் கடன் வசதி இல்லை என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தின் பலன்களைப் பெற குறைந்தபட்சம் ரூ .1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும், பாலிசியில் ஒருவர் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு மேல் வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
உதாரணமாக, பாலிசியில் காப்பீடு செய்யப்பட்ட ரூ .9,00,000 தொகையை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் மொத்தம் ரூ .9,16,200 முதலீடு செய்ய வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தில் 1 சதவீத வரிச்சலையும் பெறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாலிசியில் நீங்கள் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ .6,859 வாழ்நாள் ஓய்வூதியம் பெறுவீர்கள். காலாண்டு அடிப்படையில் ரூ .20,745 மற்றும் அரை ஆண்டு அடிப்படையில் ரூ .42,008 மற்றும் ஆண்டு அடிப்படையில் ரூ .86,265 வரை பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.