loan in sbi : தொழில் தொடங்க, வீடுக்கட்ட, அவரச தேவைக்கு என பல தேவைக்காக கடன் வாங்குவது சர்வ சாதாரணம்.
இதற்காக கந்து வட்டி கும்பலிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம். உங்கள் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியில் 3 விதமான கடனை எஸ்பிஐ வங்கி நடைமுறையில் வைத்துள்ளது. அதுக் குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
அவசர காலத்தில் வங்கியிடம் கடன் பெற்று பயன் அடையுங்கள்.
1. சொத்து கடன்:
தனிநபர்கள் சொத்துக்கள் மீது எஸ்பிஐ வங்கி கடன் அளிக்கிறது.எஸ்பிஐ வங்கி குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் எதிரான கடனை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.
2. பர்சனல் லோன்:
கடன் தேவைப்படும் போது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது. மாத வருவாயில் 12 மடங்கு வரை தனிநபர் கடனாக எஸ்பிஐ வங்கி அளிக்கிறது.
read more... எஸ்பிஐ கஸ்டமர்ஸ் இந்த தகவலை தெரிஞ்சிகோங்க.. வங்கியில் முக்கிய 4 மாற்றங்கள் வந்துவிட்டன
3. கல்விக் கடன்:
எஸ்பிஐ வங்கி மாணவர் கடன், ஸ்காலர் லோன் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான கடன் போன்றவற்றையும் அளிக்கிறது. ஸ்காலர் கடன் என்பது ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எயிம்ஸ் போன்ற பிரீமியம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாகும்.
கல்வி கடனைப் பொருத்தவரையில் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது.