/tamil-ie/media/media_files/uploads/2023/03/rupee-pixabay-1200-1-2.jpg)
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது போஸ்ட் ஆபிஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு பட்ஜெட்டின் போது மகளிருக்கு பிரத்யேக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தில் அதிகப்பட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். குறைந்தபட்சமாக ரூ.1000 வரையும், அதன்பின்னர் ரூ.100-ன் மடங்குகளிலும் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்பை தொடரலாம். பெண் குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்க பாதுகாவலர் கட்டாயம் ஆகும்.
7.5 சதவீதம் வட்டி கிடைக்கும் இந்தத் திட்டத்தில் 3 மாதத்துக்கு ஒருமுறை வட்டி சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டமானது போஸ்ட் ஆபிஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும். மேலும், 2025 மார்ச் 31ஆம் தேதிவரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.