இந்தியாவின் வாகனத்துறையில் மஹிந்திரா நிறூவனமானது வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால், ஆட்டோமொபைல் துறைக்கு இது சோதனை காலமாக மாறியுள்ளது. டாடா, மாருதி என பிரபல கார் நிறுவனங்கள் ஜூன் மாதம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 2018 ஓப்பிடும் போது ஜூன் 2019ல் 4 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது மஹிந்திரா மற்றும் மஹிந்திரா. சென்ற ஆண்டு ஜூன் மாதம் 18,137 யூனிட் பாசஞ்சர் வாகனங்களை விற்ற மஹிந்திரா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 18,826 பாசஞ்சர் வாகனங்களை விற்றுள்ளது. சென்ற ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மரஷோ, பாசஞ்சர் கார் மற்றும் வேன்கள் 36 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்தாலும் கூட யூவி வாகனங்கள் 8 சதவிகிதம் வளார்ச்சியை பதிவு செய்தது.
இது குறித்து எம்&எம் யின் விற்பனை பிரிவின் தலைவர் வீஜே ராம் நக்ரா கூறுகையில், மேலும் மஹிந்திராவில் பாசஞ்சர் வாகன பிரிவில் 4 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்தது மகிழ்ச்சியையே தருகிறது. யூவி வாகன பிரிவில் 8 சதவிகிதம் வளர்ச்சியை பதுவு செய்துள்ளோம். மேலும் ஜூன் 2019 யில் நாங்கள் கமர்ஷியல் வாகன பிரிவில் சானல் இன்வெண்டரியை சரி செய்தோம்' என்றார்.
சென்ற ஆண்டு ஆல்ட்டுராஸ் ஜி4 காரை மஹிந்திரா அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.