/tamil-ie/media/media_files/uploads/2022/09/marriage-1200.jpg)
சுமார் 54 சதவீத இளைஞர்கள் நடுத்தர அளவிலான கடனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
பெரும்பாலான இளம் இந்தியர்கள் திருமணத்திற்கு முன் நிதி நிலைத்தன்மையை விரும்புகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியா லெண்ட்ஸ் மற்றும் பெட்டர்ஹால்ஃப் நடத்திய திருமணச் செலவு குறித்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 68% இளைஞர்கள், திருமணம் மற்றும் பிற தனிப்பட்ட இலக்குகளை அடைவதில் நிதி ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
சுயநிதி திருமணங்கள் அடுத்த பெரிய ட்ரெண்டாக மாறி வருவதாகவும், 70%க்கும் அதிகமானோர் தங்கள் திருமணத்தைத் திட்டமிட்டு நிதியுதவி செய்வதாகவும் கருத்துக் கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில், 21-35 வயதிற்குட்பட்ட 2100 க்கும் மேற்பட்டவர்கள் பதிலளித்தனர். அப்போது, வெளிவந்த சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் பின்வருமாறு.
அந்த வகையில், சுமார் 54 சதவீதம் பேர் (ரூ. 1–5 லட்சம் பேர்) நடுத்தர அளவிலான கடனைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறினர். சுமார் 40% இளைஞர்கள் திருமணம் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்காக ரூ 10 லட்சம் வரை முதலீடு செய்யத் தயாராக உள்ளனர், மேலும் 35% பேர் ரூ 5-10 லட்சம் செலவு செய்வதைப் பொருட்படுத்தவில்லை.
மேலும், 53% பேர் 100க்கும் குறைவான விருந்தினர்களைக் கொண்ட மைக்ரோ திருமணத்தை விரும்புவதாகவும், அதைத் தொடர்ந்து 31% பேர் 100-250 விருந்தினர்களைக் கொண்ட மினி திருமணத்தை விரும்புவதாகவும், 16% பேர் மட்டுமே 250+ விருந்தினர்களைக் கொண்ட பிரமாண்டமான விழாவைத் தேர்வு செய்வதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.
இதற்கிடையில், 21-35 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முடிச்சுப் போட்டு செட்டிலாவதற்கு முன் நிதி நிலைத்தன்மையில் கவனம் செலுத்துவதும் தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us