இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பினால் சரியான தேர்வு தபால் அலுவலக சேமிப்பு தான். ஏராளமான போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் வங்கிகளின் Fixed deposit ஐ விட அதிக பலன் தருகிறது. முதலீட்டோடு சிறந்த வருமானமும் கிடைக்கிறது.
அந்த வகையில், தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் வெறும் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் என்பது தான் உண்மை. இதுவொரு ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான திட்டம்.
Public Provident Fund (PPF) திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டித்துக்கொள்ளலாம்.
எனவே, இந்த திட்டம் நீண்டகாலம் பணத்தை சேமிக்க நினைப்போருக்கு சிறந்த திட்டமாகும்.
PPF திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஒரே தவணையில் 1.50 லட்சம் செலுத்த முடியாவிட்டால் மாதம் 12500 ரூபாய் செலுத்தலாம்.
மேலும், வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் PPF கணக்கில் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மெச்சூரிட்டி வருமானத்துக்கு வரி விலக்கு கிடைக்கிறது
PPF திட்டத்தில் மாதம் தோறும் 12,500 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்
- முதிர்வு காலம் - 15 ஆண்டு
- மாத முதலீடு - ரூபாய். 12,500
- ஆண்டு முதலீடு - ரூ.1.50 லட்சம்
- வட்டி - 7.5%
- இறுதியாக கிடைக்கும் தொகை - 40.70 லட்சம்
- வட்டி தொகை மட்டுமே - 18.20 லட்சம்
அதே சமயம், இந்த மூதலிட்டை 25 ஆண்டுகள் தொடர்ந்து செய்தால் கோடியை அள்ளலாம் என்பது தான் உண்ணை
- மாத முதலீடு - 12,500 ரூபாய்
- ஆண்டு முதலீடு - ரூபாய் 1.50 லட்சம்
- 25 ஆண்டில் முதலீடு செய்த மொத்த தொகை - 37.50 லட்சம்
- வட்டி - 7.1%
- 25 ஆண்டுகள் மெச்சூரிட்டி தொகை: 1.03 கோடி ரூபாய்
- வட்டி மட்டும் - 62.50 லட்சம் ரூபாய்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil