Advertisment

Mutual Fund: அதிக ரிஸ்க் எடுக்காதீங்க... முதல் முறை முதலீட்டாளர்களுக்கு சிம்பிள் டிப்ஸ்!

ஈக்விட்டி-ஓரியண்ட் ஃபண்டுகளில் முதலீடு முறையான SIP மூலம் செய்யப்பட வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Mutual Fund Investment

Mutual Fund Investment : ஒரு விசயத்தை அணுகும் போது ஆழத்திற்கு கால் வைக்க கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வதுண்டு. பங்கு முதலீட்டிற்கும் இதே அணுகுமுறையை கையாளுங்கள். முதன்முறையாக நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பது தான் வல்லுநர்களின் கருத்து.

Advertisment

அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் சம்பாதிக்கும் இரட்டை இலக்கு கூட்டு ஆண்டு வளர்ச்சியை பார்க்கும் புதிய முதலீட்டாளர்கள் நேரடியாக உயர்ந்த சந்தையில் தங்களின் முதலீடுகளை துவங்குகின்றனர். ஆனால் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களின் முதலீட்டை குறைந்த சந்தை முதலீட்டில் துவங்கி தான் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளனர் என்பதை முதன்முறையாக முதலீடு செய்யும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பங்கு சந்தையில் முதன்முறையாக நுழையும் போது குறைவான ரிஸ்க்குகள் கொண்ட பங்குகளில் மிகவும் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும். அந்த ஆரம்ப காலத்தில் நீங்கள் சந்தைகளில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை புரிந்து கொள்ள துவங்குவீர்கள்.

இதை எப்போதும் நீங்கள் செய்ய வேண்டாம்

அதிகமாக முதலீடு செய்ய கூடாது

அதிக அளவு பணத்தை நீங்கள் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்யக் கூடாது. ஏன் என்றால் அடுத்தடுத்த பங்குகள் வீழ்ச்சி அடையும் போது முதலீட்டாளர்களுக்கு இது விரக்தியை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் முதன்முறையாக முதலீடு செய்தால் அது உங்களுக்கு அதிக மன உளைச்சலை தரும். மேலும் விரைவாக முதலீடு செய்த பணத்தை எடுக்க தோன்றும். இதனால் நிறைய இழப்புகள் ஏற்படுகிறது. எனவே, ஈக்விட்டி-ஓரியண்ட் ஃபண்டுகளில் முதலீடு முறையான SIP மூலம் செய்யப்பட வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

குறைந்த சந்தை அபாயங்கள் கொண்ட பங்குகளில் முதலீடு செய்யுங்கள்

சந்தை ஏற்ற இறக்கங்களுடன் பழக்கப்படுத்திக்கொள்ள, அதிக ஆபத்துள்ள பங்குகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்கள் நிலையான வருவாய் பிரிவில் வெளிப்பாடு காரணமாக மிதமான ரிஸ்க் உள்ள சமச்சீர் நிதிகளில் முதலீடு செய்வது நல்லது. இத்தகையை நிதிகள் உண்மையான சந்தை பங்குகள் ஏற்ற இறக்கங்களை காண்பதை விட குறைவாகவே காண்கிறது. இது குறைவான மன அழுத்தத்தையே முதலீட்டாளர்களுக்கு தருகிறது. மேலும் முதல் முறையாக முதலீடு செய்யும் நபர்களை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வைக்கிறது.

ஒரு திட்டத்தோடு துவங்குங்கள்

சந்தை தொடர்பான நிதிகளில் நீங்கள் நீண்ட காலத்திற்கு தேவையான இலக்கை அடைவதற்காக முதலீடு செய்வதாக என்றால் அதற்கான திட்டம் மிகவும் அவசியம். நீண்ட கால இலக்கை அடைய முதலீட்டாளர் குறுகிய கால ஏற்ற இறக்கங்களை கவனிக்காமல் இருப்பார். இது குறுகிய காலத்தில் அதிக ரிட்டர்ன்ஸ் எதிர்பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளரின் செயலுக்கு நேர்மாறாக இருக்கும். எனவே நீங்கள் எந்த பிரிவில் முதலீடு செய்கிறீர்கள் எவ்வளவு செய்கிறீர்கள் என்பதை கவனித்து அதற்கான திட்டத்தை முதலில் உருவாக்கி பிறகு முதலீடு செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment