/tamil-ie/media/media_files/uploads/2023/04/post.jpg)
நாம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் தொடங்குவது ஃபிக்ஸட் டெபாசிட்தான். இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக, ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நீங்கள் 60 வயதுக்கு கீழே இருந்தால், சிறு சேமிப்பு தொடங்க வேண்டும் என்று நினைத்தால், ஃபிக்ஸட் டெபாசிட் விட அதிக வட்டி வழங்குகிறது என்.எஸ்.சி ஸ்கீம் ( National Savings Certificate) . இந்நிலையில் இந்த ஸ்கீம் மூலம் முதலீடு செய்தால், 7.7% வட்டி கிடைக்கும்.
இந்த திட்டத்தை தொடங்கும் முன்பு, இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த என்.எஸ்.சி சேமிப்பு திட்டம் தபால் நிலையத்தில்தான் தொடங்க முடியும். இதை மத்திய அரசு வழங்கிறது. இதில் நீங்கள் முதலீடு செய்ய ரூ.1000 செலுத்த வேண்டும். கூடுதலாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். 5 வருடங்கள் தொடர்ந்து நிதி செலுத்த வேண்டும்.
இதில் நீங்கள் முதலீடு செய்ய இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 2 நபர்கள் சேர்ந்து முதலீடு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் கூட நீங்கள் பணம் செலுத்த முடியும். தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணயதளத்திற்கு சென்று நீங்கள் இண்டர்நெட் பேகிங் மூலம் பணம் செலுத்தலாம். பக்கத்தில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று இந்த கணக்கை தொடங்கி அதில் பணம் செலுத்தலாம்.
நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்-யில் அதிகபட்ச தொகையாக, ரூ.1.5 லட்சம் வரைதான் முதலீடு செய்ய முடியும். ஆனால் என்.எஸ். சி ஸ்கீம் பொருத்தவரை அதிகபட்சமாக எவ்வளவு தொகையாக இருந்தாலும் முதலீடு செய்யலாம்.
என்.எஸ்.சி திட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் 7.7 % வட்டி வழங்கப்படும். இந்நிலையில் என்.எஸ்.சியின் வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஃபிக்ஸட் டெபாசிட்டில், 3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும். இதனால் வருடத்திற்கு கிடைக்கும் பணம் அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.