Advertisment

130 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: இந்தப் பங்குகள் காட்டில் மழை!

Share Market News Today: இந்திய பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் புதன்கிழமை (ஆக.16) வர்த்தக அமர்வை லாபத்தில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.

Share Market News Today : இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் புதன்கிழமை (ஆக.16) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 30.45 புள்ளிகள் அல்லது 0.16% உயர்ந்து 19,465 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 137.50 புள்ளிகள் அல்லது 0.21% உயர்ந்து 65,539.42 ஆகவும் இருந்தது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 0.33% சரிந்து காணப்பட்டது. தொடர்ந்து, நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 0.34%, நிஃப்டி தனியார் வங்கி 0.46%, நிஃப்டி மெட்டல் 0.94% சரிந்து வர்த்தகமானது.

மறுபுறம், நிஃப்டி மீடியா 1.20%, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.41%, நிஃப்டி ஐடி 0.59% மற்றும் நிஃப்டி பார்மா 0.61% உயர்வில் வர்த்தகமாகின.

நிஃப்டி50 பங்குகள்

அப்பல்லோ ஹாஸ்பிடல் எண்டர்பிரைசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், என்டிபிசி, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment