/tamil-ie/media/media_files/uploads/2023/06/Sensex-BSE-NSE.jpg)
உள்நாட்டு குறியீடுகள் வியாழக்கிழமை அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் நேர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் பச்சை நிறத்தில் வர்த்தகமாகின.
சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் (SGX) நிஃப்டி ஃபியூச்சர்ஸ் இன்றைய அதிகாலை வர்த்தகத்தில் 24 புள்ளிகள் அல்லது 0.13% உயர்ந்து 18,703 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆசிய சந்தைகள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் வர்த்தகமாகின. ஹாங்காங்கின் ஹாங் செங் 1.25%, சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.46%, தென் கொரியாவின் KOSPI 0.30% உயர்ந்தது.
எனினும், ஜப்பானின் நிக்கேய் 225 1.49% சரிந்தது. தொழில்நுட்பம் சார்ந்த நாஸ்டாக் 0.36% அதிகரித்தது.
இந்திய துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 62.90 புள்ளிகள் அல்லது 0.14% உயர்ந்து 44,164.55 ஆகவும், நிஃப்டி ஆட்டோ 159.25 புள்ளிகள் அல்லது 1.09% உயர்ந்து 14,729.50 ஆகவும் காணப்பட்டது.
நிஃப்டி ரியாலிட்டி 5.85 புள்ளிகள் அல்லது 1.19% உயர்ந்து 498.40 ஆகவும், நிஃப்டி ஐடி 549.70 புள்ளிகள் அல்லது 1.88% குறைந்து 28,689.05 ஆகவும் இருந்தது.
தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை +350.08 (0.56%) உயர்ந்து, 63,142.96 ஆகவும், என்எஸ்இ 127.40 (0.68%) உயர்ந்து 18,726.40 ஆகவும் காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.