Advertisment

பின்தங்கிய வங்கி பங்கு; 700 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்

திங்கள்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது.

author-image
WebDesk
May 08, 2023 17:43 IST
Share Market News Today June 27 2023

இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.

இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் திங்கள்கிழமை (மே 8) அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 202.8 புள்ளிகள் அல்லது 1.12% உயர்ந்து 18,271.8 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 709.96 1.16% உயர்ந்து 61,764.25 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 622.8 புள்ளிகள் அல்லது 1.46% உயர்ந்து 43,284 ஆகவும், நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 280.1 புள்ளிகள் அல்லது 1.47% உயர்ந்து 19,303.95 ஆகவும் இருந்தது.

அதேநேரத்தில், நிஃப்டி PSU வங்கி 38.5 புள்ளிகள் அல்லது 0.14,13% ஆகவும் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையில், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

மறுபுறம், கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டி மற்றும் பிரிட்டானியா ஆகியவை சரிந்தன.

வங்கி நிஃப்டி 750 புள்ளிகள் அல்லது 1.77% உயர்ந்து 43,418.55 ஆக இருந்தது. இண்டஸ்இண்ட் வங்கி, ஏயூ வங்கி, பந்தன் வங்கி, கோடக் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவை குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.

எனினும், பஞ்சாப் நேஷனல் வங்கி நஷ்டத்தை சந்தித்தது. இதற்கிடையில் ஆட்டோ மற்றும் நிதி தொடர்பான பங்குகள் லாபம் கொடுத்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bombay Stock Exchange #Sensex #Nifty #Nse #Stock Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment