/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.
இன்றைய பங்கு வர்த்தகத்தில், தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 51.8 புள்ளிகள் அல்லது 0.28% சரிந்து 18,129.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 128 புள்ளிகள் அல்லது 0.21% குறைந்து 61,431.74 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 53.6 புள்ளிகள் அல்லது 0.12% உயர்ந்து 43,752.3 ஆக காணப்பட்டது. நிஃப்டி ஆட்டோ 0.88%, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.10%, நிஃப்டி பார்மா 1.27%, நிஃப்டி ஆயில் & கேஸ் 1.10%, நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.90% மற்றும் நிஃப்டி ரியாலிட்டி 2.37% சரிந்து காணப்பட்டது.
நிஃப்டி50 இல் பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதே சமயம் டிவிஸ் லேப், அதானி போர்ட்ஸ், ஐடிசி, எஸ்பிஐஎன் மற்றும் பவர் கிரிட் ஆகியவை நஷ்டமடைந்தன.
அமெரிக்கா தனது கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், இந்திய பங்குகள் ஆசிய நாடுகளுடன் இணைந்து வர்த்தகமாகின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.