/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.
Share Market News Today : இந்திய பங்குச் சந்தை உள்நாட்டு பங்கு குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் புதன்கிழமை (ஆக.30) வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.
தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 19,347.45 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 65,087.25 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்தன.
பரந்த சந்தைகள் பெரும்பாலும் லாபத்தில் வர்த்தகமாகின. நிஃப்டி ஸ்மால்கேப் 50 மற்றும் நிஃப்டி மிட்கேப் 50 1.35% மற்றும் 0.86% சேர்த்தன.
வங்கி நிஃப்டி 262.65 புள்ளிகள் சரிந்து 19,232.60 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி ரியாலிட்டி, மெட்டல், ஐடி மற்றும் ஆட்டோ ஆகியவை மற்ற துறை குறியீடுகளில் முன்னணியில் இருந்தன.
நிஃப்டி இன்ட்ரா டே வர்த்தகம்
நிஃப்டி ஸ்மால்கேப் 50 இன்ட்ரா டே 1.46% அதிகரித்து 5,604.90 ஆக இருந்தது. பிஎஸ்இ, சுஸ்லான் எனர்ஜி, ஹிந்துஸ்தான் காப்பர், ரேணுகா சுகர்ஸ், ஆர்பிஎல் பேங்க், ஈஸ்மைட்ரிப் மற்றும் ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
நிஃப்டி மிட்கேப்
நிஃப்டி மிட்கேப் 50 113.45 புள்ளிகள் உயர்ந்து 11,222.80 ஆக இருந்தது. இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம், ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், எஸ்கார்ட்ஸ், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, வோடபோன் ஐடியா மற்றும் டிவிஎஸ் மோட்டார் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.