/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-share-market-2.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிந்து காணப்பட்டன.
இந்திய உள்நாட்டு குறியீடுகள் வாராந்திர அமர்வை சாதனை உச்சத்தில் முடித்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 இன் புதிய 52 வார உயர்வானது 19,991.85 ஆகும். அதேபோல் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புதிய சாதனை அதிகபட்சம் 67,619.17 ஆகவும், பேங்க் நிஃப்டி அதிகபட்சமாக 46,256.20 ஆகவும் காணப்பட்டது.
இதற்கிடையில், என்எஸ்இ நிஃப்டி 50 146 புள்ளிகள் அல்லது 0.74% உயர்ந்து 19,979.15 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 474.46 புள்ளிகள் அல்லது 0.71% உயர்ந்து 67,571.90 ஆகவும் முடிவடைந்தன.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 517.60 புள்ளிகள் அல்லது 1.13% உயர்ந்து 46,186.90 ஆக காணப்பட்டது. நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 1.02% உயர்ந்தும், நிஃப்டி எஃப்எம்சிஜி 1.35% உயர்ந்ததும், நிஃப்டி பார்மா 1.46% உயர்ந்தும் காணப்பட்டன. நிஃப்டி 6 ஐடி சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையில் ஐடிசி, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் மற்றும் கிராசிம் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் பிரிட்டானியா ஆகியவை நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.