scorecardresearch

வெளுத்து வாங்கிய வங்கி பங்குகள்: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

இன்றைய பங்கு வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்ப குறியீடு 1 சதவீதமும், ஆட்டோ, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் தலா 0.5 சதவீதமும் உயர்ந்துள்ளது. இருப்பினும், மருந்து குறியீடு 1 சதவீதம் சரிந்தது.

Stock Market Today 30 May 2023
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 35.20 புள்ளிகள் அல்லது 0.19 சதவீதம் உயர்ந்து 18,633.85 இல் முடிவடைந்தது.

இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (மே 20) அமர்வை லாபத்தில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 73.45 புள்ளிகள் அல்லது 0.41% உயர்ந்து 18,203.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 297.94 புள்ளிகள் அல்லது 0.48% உயர்ந்து 61,729.68 ஆகவும் இருந்தது.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 217.1 புள்ளிகள் அல்லது 0.50% உயர்ந்து 43,969.40 ஆகவும், நிஃப்டி ஐடி 1.47% உயர்ந்தும், நிஃப்டி பார்மா 0.96% சரிந்தன. தேசிய பங்குச் சந்தையில், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
டிவிஸ் லேப், பிரிட்டானியா, ஓஎன்ஜிசி, என்டிபிசி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

மேலும், இன்றைய பங்கு வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்ப குறியீடு 1 சதவீதமும், ஆட்டோ, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் தலா 0.5 சதவீதமும் உயர்ந்துள்ளது. இருப்பினும், மருந்து குறியீடு 1 சதவீதம் சரிந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty ends at 18200 sensex up 298 pts