New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-share-market-2.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிந்து காணப்பட்டன.
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்கத்தை லாபத்தில் நிறைவு செய்தன.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிந்து காணப்பட்டன.
இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு பங்கு குறியீடுகளான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் உயர்வுடன் முடிந்தன.
இதனால், இரண்டு நாள் தொடர் வீழ்ச்சி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, நிஃப்டி-50 107 புள்ளிகள் அதிகரித்து 19,753.8 ஆகவும், சென்செக்ஸ் 360 புள்ளிகளுக்கு மேல் 66,527 ஆகவும் முடிந்தது.
இதற்கிடையில், பரந்த சந்தைகளும் லாபத்தில் நிறைவு செய்தன. நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 உடன் முறையே 0.97% மற்றும் 0.88% சேர்ந்தது.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி ஐடி, நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி ஆயில் & கேஸ் அனைத்தும் 1%க்கு மேல் உயர்ந்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி மற்றும் நிஃப்டி ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே நஷ்டமடைந்தன.
நிஃப்டியில் அதிக நஷ்டமடைந்த பங்குகள்
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், கோடக் வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை நிஃப்டி 50 குறியீட்டில் அதிக நஷ்டம் அடைந்தன.
நிஃப்டியில் லாபம்
என்டிபிசி, அதானி போர்ட்ஸ், டெக்எம், பவர் கிரிட் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை இன்று நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.