/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.
மந்தமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியிலும், பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் திங்கள்கிழமை அமர்வை லாபத்தில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 111 புள்ளிகள் அல்லது 0.61% உயர்ந்து 18,314.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 234 புள்ளிகள் அல்லது 0.38% அதிகரித்து 61,963.68 ஆகவும் நிறைவுற்றது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 84.30 புள்ளிகள் அல்லது 0.19% சரிந்து 43,885.10 ஆகவும், நிஃப்டி ஐடி 703.65 புள்ளிகள் அல்லது 2.49% அதிகரித்து 29,007.30 ஆகவும் காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், டிவிஸ் லேப், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா, ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை நஷ்டத்தை சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.