இந்திய பங்குச் சந்தை புதன்கிழமை (ஜூன் 21) உள்நாட்டு குறியீடுகள் உயர்வில் முடிவடைந்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 40.15 புள்ளிகள் 0.21% அதிகரித்து 18,856.85 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 195.45 புள்ளிகள் அல்லது 0.31% உயர்ந்து 63,523.15 ஆக காணப்பட்டது. துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 92.70 புள்ளிகள் அல்லது 0.21% உயர்ந்து 43,859.20 ஆகவும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.44% உயர்ந்து காணப்பட்டது.
நிஃப்டி எஃப்எம்சிஜி 0.44% மற்றும் நிஃப்டி மெட்டல் 0.94% சரிந்தது. பவர் கிரிட், ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவை நிஃப்டி 50 இன் அதிக லாபம் ஈட்டின.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, டிவிஸ் லேப், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் ஐடிசி ஆகியவை நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“