200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: அதானி பங்குகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Nifty settles below 18800 Sensex tanks 200 pts

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி

இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று சரிவை சந்தித்தன. உலகளாவிய சந்தைக்கு எதிரான மனநிலை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

Advertisment

தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 70.55 புள்ளிகள் அல்லது 0.37% சரிந்து 18,755.45 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 216.28 புள்ளிகள் அல்லது 0.34% சரிந்து 63,168.30 ஆகவும் காணப்பட்டது.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 304.40 புள்ளிகள் அல்லது 0.69% சரிந்து 43,633.75 ஆகவும், நிஃப்டி தனியார் வங்கி 0.89% ஆகவும், நிஃப்டி ஆட்டோ 0.62% ஆகவும் காணப்பட்டன.

மறுபுறம், நிஃப்டி ஐடி 0.42%, நிஃப்டி பார்மா 0.17% மற்றும் நிஃப்டி பிஎஸ்யு வங்கி 0.96% உயர்ந்தன. நிஃப்டி 50 இல் ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா மற்றும் டிசிஎஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

Advertisment
Advertisements

எனினும், அதானி எண்டர்பிரைசஸ், ஹீரோ மோட்டோகார்ப், கோடக் வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை நஷ்டமடைந்தன.
மேலும், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, கோடக் வங்கி, மஸ்டாக், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐஎன், எச்ஏஎல் மற்றும் ஐகியோ ஆகியவை என்எஸ்இ-யில் மிகவும் செயலில் உள்ள பங்குகளாக இருந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nifty Bombay Stock Exchange Sensex

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: