/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-share-market-2.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்ந்து காணப்பட்டன.
புதன் கிழமை அமர்வில் உள்நாட்டு குறியீடுகள் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 55.10 புள்ளிகள் அல்லது 0.28% சரிந்து 19,384.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 223.94 புள்ளிகள் அல்லது 0.34% சரிந்து 65,393.90 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 105.60 புள்ளிகள் அல்லது 0.24% சரிந்து 44,639.45 ஆகவும், நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ் 0.23% சரிந்தன, நிஃப்டி ஐடி 0.71% மற்றும் நிஃப்டி தனியார் வங்கி 0.29% சரிந்தன.
நிஃப்டி எஃப்எம்சிஜி 0.18%, நிஃப்டி பார்மா 0.30% மற்றும் நிஃப்டி PSU வங்கி 0.83% உயர்ந்தன. நிஃப்டி 50 இல் ஓஎன்ஜிசி, ஐஷர் மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, கோடக் வங்கி மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதானி எண்டர்பிரைசஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், இன்ஃபோசிஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.