இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் செவ்வாய்கிழமை அமர்வை பிளாட்டில் முடிந்தது. என்எஸ்இ நிஃப்டி 50 8.25 புள்ளிகள் அல்லது 0.04% உயர்ந்து 19,680.60 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 29.07 புள்ளிகள் அல்லது 0.04% குறைந்து 66,355.71 ஆகவும் முடிந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 78.05 புள்ளிகள் அல்லது 0.17% சரிந்து 45,845 ஆக காணப்பட்டது. மேலும், நிஃப்டி எஃப்எம்சிஜி 0.86%, நிஃப்டி பிஎஸ்யூ வங்கி 1.46% சரிந்து காணப்பட்டது. மறுபுறம், நிஃப்டி ஆட்டோ 0.95%, நிஃப்டி மெட்டல் 2.94%, நிஃப்டி 2.94% உயர்ந்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் (நிஃப்டி-50) ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் என்டிபிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, லார்சன் & டூப்ரோ, பிரிட்டானியா மற்றும் கோடக் வங்கி ஆகியவை நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“