/tamil-ie/media/media_files/uploads/2022/09/Markets-Reuters.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022
Today Stock Market 23rd September 2022: இந்தியப் பங்குச் சந்தைகள் வார நிறைவு நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. பி.எஸ்.இ., சென்செக்ஸ், என்.எஸ்.இ., நிஃப்டி கிட்டத்தட்ட 1.5% வரை வீழ்ச்சி கண்டது.
அமெரிக்க பெடரல் வங்கியின் சாதகமற்ற சமிஞ்கைகள், உலக அளவில் சந்தைகளில் ஏற்பட்ட சுணக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எதிரொலித்தது.
இந்த நிலையில் மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ., குறியீடு சென்செக்ஸ் 1028 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தைகளில் ஐடிசி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் தவிர இதர பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
அதிகப்பட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் பங்கு 2.80 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. அதேபோல் பவர் கிரிட் கார்ப்பரேஷன் பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
50 பங்குகளை கொண்ட தேசிய பங்குச் சந்தையில் சிப்லா, திவிஸ் லேப், ஐடிசி, சன் பார்மா மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட 5 பங்குகள் மட்டுமே லாபம் கண்டன.
மீதமுள்ள 45 பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதிகப்பட்சமாக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்குகள் 4 சதவீதமும், அதானி போர்ட் பங்குகள் 3.47 சதவீதமும் நஷ்டம் கண்டன.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 302.45 புள்ளிகள் (1.72%) வரை சரிந்து 17,327.35 எனவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,028.8 (1.10%) புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 58,098.92 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.