New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/markets.png)
மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1100 புள்ளிகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தை
அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளின் சுணக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் கடந்த வார நிறைவு நாளான வெள்ளிக்கிழமை எதிரொலித்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1100 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 17,600 ஆக சரிந்தது. இந்த நிலையில் வரும் வாரத்தில் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் நிஃப்டி 17200-400 வரை சரிவை காணலாம் என்றும் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், நிஃப்டி 17820க்கு மேல் காணப்படும் பட்சத்தில் சந்தை மீண்டும் பழைய நிலையை எட்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
இதற்கிடையில் கடந்த வாரங்களில் நிஃப்டி சரசரவென உயர்வை கண்டது. ஆனால் கடந்த வாரம் நிலைமை மோசமானது. ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை கிட்டத்தட்ட 1100புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
இது வரும் வாரங்களில் காணப்படலாம் என்றும் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சந்தை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.