இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் ஏன் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறீர்கள் என்றும் இதிகாச கதாபாத்திரமான அனுமனுடன் ஒப்பிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியுள்ளார்.
”மைண்ட்மைன்” என்ற மாநாட்டில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்திய முதலாளிகளிடம் முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளார். அவர் கூறுகையில் “ சீனாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்க முடிவெடுத்துள்ளனர். அவர்களுக்கு நமது நாட்டின் வியாபார கொள்கைகள் பிடித்துள்ளது. வெறும் கொள்கைகள் மட்டுமல்லா நம்மது நாட்டில் ஒட்டுமொத்த சூழலையும் அவர் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்ட விரும்புகிறேன். எது உங்களை முதலீடு செய்ய தடுக்குகிறது ? நான் எப்போதும் இந்தியாவின் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தன் பேசியிருக்கிறேன். என்னிடம் பலர் தனீயார் நீறுவனங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோதும். அவருக்கு ஆதரவாகவே நான் பேசியிருக்கிறேன். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும் வழங்கியிருக்கிறோம். ஆனால் முதலீடு செய்ய எது உங்களை தடுக்கிறது ?
எம்எஸ்எம்இ கடன்கள் குறித்து பேசியாகவேண்டும். நான் பல மணிநேரம் இது தொடர்பான தகவல்களை ஆய்வு செய்தேன். பல பெரிய நிறுவனங்களும், எம் எஸ் எம் இ கடன்களை செலுத்தாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வெளிநாட்டில் உள்ள நிறுவங்கள் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் நீங்களோ அனுமனைப்போல் நடந்துகொள்கிறீர்கள். உங்களால் முடியும் என்று யார் கூற வேண்டும் ? உங்களது ஆற்றலையும், பலத்தையும் யார் அருகில் பார்த்துகொண்டு, உங்களை செயல்படத் தூண்டுவார்கள். அனுமனுக்கு அவரது ஆற்றலை எடுத்துச் செல்ல முடியுமா? என்று அவர் பேசியுள்ளார்.