ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; ஆசிய பங்குச்சந்தையில் எதிரொலி: உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலைகள் 76 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகவும், சராசரியாக 30 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்திருப்பதாகவும் ஜே.பி. மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கச்சா எண்ணெய் விலைகள் 76 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகவும், சராசரியாக 30 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்திருப்பதாகவும் ஜே.பி. மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Crude

இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடைந்து, அமெரிக்காவும் இதில் இணைந்திருப்பதால், உலக அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் நேரடி விளைவாக, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

Advertisment

 

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

 

Advertisment
Advertisements

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா, ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்த மோதலின் விளைவுகளை தீவிரமாக கணக்கில் எடுத்து வருகின்றனர். ஈரானின் பதில் தாக்குதல் எப்படி இருக்கும் என்பது குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. எனினும், ஆரம்பகட்ட நகர்வுகள் கட்டுக்குள் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை சுமார் 2.8% உயர்ந்துள்ளது. ஈரானிடம் உள்ள பல்வேறு வாய்ப்புகளில், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த இறுதி முடிவை உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் என்று ஈரான் பிரஸ் டிவி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் ஓமனின் கடல் எல்லைகளில் அமைந்துள்ள இந்த ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் கால் பகுதியையும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதத்தையும் கொண்டுள்ளது. ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைய இந்த நீரிணையை நம்பியுள்ளன. மாற்று கடல்வழி இல்லாததால், இந்த நீரிணை மூடப்படும்பட்சத்தில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது கடுமையான விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

ஐரோப்பா மற்றும் ஜப்பான், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், திரவ இயற்கை எரிவாயுவை பெரிதும் சார்ந்துள்ளன. அதே சமயம் அமெரிக்கா ஒரு நிகர ஏற்றுமதியாளராக உள்ளது. உலகிலேயே மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் நாடாகவும், 85 சதவீதத்திற்கும் அதிகமான இறக்குமதி சார்பு நிலையையும் கொண்டுள்ள இந்தியா, எண்ணெய் விலை மாற்றங்களுக்கு மிகவும் பாதிப்படையும் தன்மை கொண்டது.

உலகளாவிய சந்தைகளின் நிலை

பங்குச் சந்தையில் S&P 500 பங்குகள்,  0.5 சதவீதம் சரிந்தன; நாஸ்டாக் பங்குகள் 0.6 சதவீதம் சரிந்தன. ஜப்பானைத் தவிர்த்து ஆசிய-பசிபிக் பங்குகளின் MSCI குறியீடு 0.5 சதவீதம் குறைந்தது. மேலும், ஜப்பானின் நிக்கேய் 0.9 சதவீதம் குறைந்தது.

EUROSTOXX 50 பங்குகள் 0.7 சதவீதம் இழந்தன. அதே நேரத்தில் FTSE பங்குகள் 0.5 சதவீதம் சரிவைக் கடந்தன. DAX பங்குகள் 0.7 சதவீதம் சரிந்தன.

இதனிடையே, அமெரிக்க கச்சா எண்ணெய் 2.8 சதவீதம் உயர்ந்து 75.98 டாலராக உள்ளது. நாணய சந்தைகளில், அமெரிக்க டாலர் ஜப்பானிய யெனுக்கு எதிராக 0.25 சதவீதம் உயர்ந்து 146.415 ஆக உள்ளது. யூரோ 0.33% குறைந்து 1.1484 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் தங்கம் 0.1 சதவீதம் குறைந்து அவுன்ஸ் 3,363 டாலராக இருந்தது.

ஆய்வாளர்களின் கருத்து

முன்னதாக, மேற்கு ஆசிய பகுதியில் பதற்றமான சூழ்நிலைகள் நிலவியபோது, கச்சா எண்ணெய் விலைகள் 76 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகவும், சராசரியாக 30 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்திருப்பதாகவும் ஜே.பி. மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Crude Oil Prices

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: