ஆவணி மாத கடைசி முகூர்த்தம், ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
2/5
மதுரை மல்லிகை பூவுக்கு பெயர் பெற்றது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு, மதுரையை சுற்றி உள்ள கிராமங்களான எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ மற்றும் பிற பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
3/5
இந்நிலையில், ஆவணி மாத கடைசி முகூர்த்தம், ஓணம் பண்டிகையையொட்டி நேற்று திடீரென மல்லிகை பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.
Advertisment
4/5
அதன்படி, மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை காலை நேரத்தில் ரூ.2,500 எனவும், நேரம் செல்ல செல்ல ரூ.1,500 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
5/5
இதுபோல், முல்லை கிலோ ரூ.800, பிச்சி ரூ.600, சம்பங்கி ரூ.300, நாட்டு சம்பங்கி ரூ.500, செவ்வந்தி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news